கடல்குளி பெருநாள் என்னும் கடல்குளிப்பு
கடல்குளி பெருநாள் என்னும் கடல்குளிப்பு
இன்று புதன்கிழமை. முஸ்லிம்கள் பண்பாட்டு வாழ்வில் இந்த புதன் முக்கியமானது.தமிழ்ப்பண்பாட்டு வாழ்வில் தமிழ் மாதங்களில் சில கிழமைகள் முக்கியத்துவம் பெறுவது இஸ்லாமிய மாதங்களில் ஸபர் எனப்படும் இந்த மாதத்தின் கடைசி புதன்கிழமை முக்கியத்துவம் பெறுகிறது.
புதன்கிழமை குறித்த வேறுசில நம்பிக்கைகளும் முஸ்லிம்களிடம் இருக்கின்றன. ஐயூப்(யோபு) எனப்படும் இறைத்தூதர் தொழுநோயால் மிகவும் சிரமப்பட்டார். அவருக்குத் தொழுநோய் அறிகுறிகள் தென்பட்டது புதன்கிழமை என்னும் நம்பிக்கை இருக்கிறது.
உடலில் இரத்தம் வெளியேறும் சிகிட்சைகளை புதன்கிழமை மேற்கொள்ளக்கூடாது என்பது மற்றொரு நம்பிக்கை.
இவ்வாறு கடலுக்கு செல்வதை கடல்குளிப்பு என்கிறார்கள். அங்கே ஏதேனும் இறைநேசர் சமாதி இருந்தால் அந்த இடத்தை தங்களின் வருகையால் மரியாதை செய்கிறார்கள்.
கடல் இல்லாத வட்டாரத்தில் வாழ்பவர்கள் அருகிலிருக்கும் ஆற்றங்கரைகளுக்குச் செல்கிறார்கள்.
What's Your Reaction?






