இந்தியா என்னும் பெயரின் காலத்தை இரண்டாயிரம் ஆண்டுகள் முன்கொண்டு செல்லமுடியும்

இந்தியா என்னும் பெயரின் தோற்றம் குறித்த விவா தங்கள் தீவிரப்பட் டுள்ளன. இந்தியா Vs பாரத் என்னும் என்னும் எதிர்வுகள் வழியாக இது கூர்மைப்படுகிறது. இந்தியா என்னும் சொல்லை காலனிய உருவாக்கம் என்று இந்துத்துவம் கூறுகிறது. இதனை மறுப்பவர்கள் சிந்துநதி வட்டா ரத்தில் இருந்து இதன் தோற்றத்தை அடையாளப்படுத்துகின்றனர்.
வரலாற்றுக்கு முன்பிருந்தே வணிகத்தின் வழியாக இந்தியா என்று இந்த நிலப்பரப்பைக் குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது அதுவும் சிந்து பாயும் வடஇந்தியாவை மட்டும் வைத்தல்ல தென்இந்தியாவிலும் அந்த வழக்கம் இருந்துள்ளது என்பதை அரபுநாட்டுக் குறிப்புகள் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது .
வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இந்தியாவின் மேற்குக்கடற்கரை வழியாக கடல்கடந்த வாணிகம் தீவிரப்பட்டுவிட்டது. முதலில் கிரேக்கர், ரோமர் இவர்களுக்குத் துணையாக அரபு நாட்டினர் அதன்பிறகு கிரேக்கம் ,ரோம் வீழ்ந்த பிறகு அரபு நாட்டினர் இந்த வணிகத்தில் முன்னிலைப் பட்டனர். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் யவனர் என்னும் சொல் இவர்களைக் குறிப்பிடுவது. மேற்குக் கடற்கரை எனும் போது இந்திய நிலப்பரப்பில் தெற்குப்பகுதி.
சவுதி அரேபியாவில் இருக்கும் முஸ்லிம்களின் புனித இறைஇல்லமான கஃபாவின் நான்கு முனைகளில் ஒருமுனையின் பெயர் ருக்னுல்ஹிந்த். இந்தியமுனை என்பது இதன் பொருள். நபி முஹம்மது அவர்களின் பல்வேறு குறிப்புகளில் இந்தியா பற்றியக்குறிப்பு இருக்கிறது. ஒருமுறை நபி அவர்கள் கஃபாவின் இந்தியமுனைப்பகுதியில் நின்றுகொண்டு தன்னுடைய மேலாடையை நீக்குகிறார்கள். வீசும் காற்று அவர்களின் மேனியைத் தழுவுகிறது . அந்த அனுபவத்தை ‘இந்தியாவில் இருந்து வீசும் ஏகத்துவத்தின் காற்று என்னைத் தழுவுகிறது’ என்று நபிகள் குறிப்பிட்டார்கள் என்றும் ஒரு குறிப்பு இருக்கிறது.
3)
நபிகளின் காலத்தில் கஃபு என்னும் கவிஞர் இருந்தார். இவரின் தந்தை ஸுஹைர். அன்றைய அரபு வழக்கப்படி கஃபு இப்னு ஸுஹைர் என்று அவர் அழைக்கப்பட்டார். கஃபு இப்னு ஸுஹைர் நபியையும் அவர் அறிமுகம் செய்த இஸ்லாமிய சமயத்தையும் எதிர்ப்பதிலும் இழிவுசெய்து கவிதை புனைவதிலும் மிகத்தீவிரமாக இருந்தார். அவர் மீது முஸ்லிம்களுக்கு கடுமையான கோபம் இருந்தது. அந்தக்கோபம் கொலை செய்யும் அளவுக்கு இருந்தது .
இப்போது கஃபு இப்னு ஸுஹைருக்கு நபிகளை சந்தித்து இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவேண்டும். நபியும் அவரின் தோழர்களும் தன்மீது கொலை வெறி யில் இருக்கிறார்கள். கஃபு இப்னு ஸுஹைர் மாறுவேடம் போட்டுக்கொண்டு நபியும் அவரின் தோழர்களும் இருக்கும் சபைக்கு செல்கிறார்.
‘பானத்ஸுஆது’ கவிதைகளில் தன்னைப்பறி கொடுத்த நபிகள் தன்மேல் போர்த்தி இருந்த போர்வையை எடுத்து கஃபு இப்னு ஸுஹைருக்கு அணிவித்து சிறப்பித்தார்கள் என்று இஸ்லாமிய வரலாறு குறிப்பிடுகிறது. நபிகளின் காலம் ஏழாம் நூற்றாண்டு எனும்போது அதற்கு பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே இந்தியா என்னும் சொல்லின் தொடக்கம் உருவாகிவிட்டது என்பதை கணிக்கமுடிகிறது.
4)
இந்தோனோசியா செல்ல இருக்கும் மோடியின் பயண அட்டவணையில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்னும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. என்ன செய்ய இந்தோ- ஏசியா என்னும் இரு சொற்களின் கூட்டாக அல்லவா இந்தோனோசியா இருக்கிறது.
What's Your Reaction?






